Monday, May 14, 2007

குயிலின் முத்தம்



இதய அறைக்குள்
புதைந்து கிடந்த
என் சந்தோசங்களை
மீட்டுக்கொண்டது

உன் முத்தங்கள்.

என்இதழ் தந்த முத்தங்களும்
என் மொழி தந்த கவிதைகளும்
நீ..பருகிடும்போதா..


என்னை குயில் என அழைத்து
இந்த குயிலில்

முத்தங்களை
வருடிச்சென்றாய்.
உன் முத்தப்புயலின்

வேகத்தில்
அவஸ்தைப்படும் நான்.
தித்திக்கும் முத்தங்கள்

நித்தம் நித்தம்
உன்னிடம் இருந்து

கிடைக்குமானால்
என் வாழ்வையே..
உன்னிடம் அர்ப்பணித்து

கொள்வேன்.

2 comments:

Balamurali said...

ஆஹா அருமையான கவிதை!

rahini said...

கவிக்குயில் சரோஜினிக்கு பிறகு இன்னும் ஒரு கவிதைக்குயில் ?!!!
அந்த கவிக்குயில் போலவே புகழ் அடைவீர்கள் என்று
மகிழ்கிறேன் தமிழ் வளருங்கள் நீங்களும் வளருங்கள்


நன்றி ராகினி அவர்களே
உங்கள் தேன் குரலையும் கேட்டு மகிழ்கிறேன்

உங்கள் தமிழறிவையும் கண்டு மகிழ்கிறேன்


அன்புடன்
தமிழ்த்தேனீ
நன்றிகள் பல உங்கள் வாழ்த்து கிடைத்ததே பெரும் மகிழ்சி
ராகினி

10:51 AM