Monday, May 14, 2007

நிலா


மெல்லிய காற்றின் ஓசையில்
மௌனமாய்ப் போன
என் உணர்வுகளை
நீ.. தீண்டிப்பார்க்கும் போது...
ஒவ்வொரு பகலும்
இரவாகிப் போயின...
எதிர் பார்ப்புடன் காத்திருக்க
வைக்கின்றது.
உன் காதல் கருணை
அன்புநினைவில் நிறுத்தி வைத்திரு
உன் இதயத்திலும்
உன் இதயத்தை வருடும்
சட்டை பையிலும்
அப்போது உன் இயத்தை
நான்முத்தமிட்டு
கொண்டே இருப்பேன்.
தனிமையில் தத்தளித்த நேரங்கள்
பொசுங்கி இன்று இரு ஜீவன்..
ஓன்றாகிப்போன
நாட்கள் கண்டுகொண்டேன்
நிலவாக வந்த போது.



1 comment:

Balamurali said...

படத்துக்கு பொருத்தமாக அழகான கவிதை எழுதி அசத்திட்டீங்க...
ராகினி!