Wednesday, February 17, 2010

எனது வானொலி நிகழ்ச்சிகள்


எனது வானொலி நிகழ்ச்சிகள் (100) ஓரே சீடியாக வெளிவந்துள்ளது
நிகழ்ச்சி தொகுப்பை நீங்கள் தொடர்ந்து 18 மணித்தியாளமும் 30 நிமிடங்களும் கேட்கலாம்
இலவசமா
பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.kavithaikuyil@gmail.com
வானொலி நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்டு மகிழ. தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம் neu 004915225831756

கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.
http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI
----------------------------------------
(neu)---அன்பு நேயர்களுக்கு என் வானொலி
நிகழ்ச்சிகளை வாரம் தோறும் ஜரோப்பியதமிழ் வானொலி
ETR ல் மதியம் 2 முதல் 2.30 வரை கேட்டு மகிழவும்.

Saturday, December 27, 2008

Thursday, December 11, 2008

இசையோடு நான்.

இசையோடு நான்.
---------------

உயிரின் ஊட்டச்சத்து இசை
கருத்துக்கு உறைவிடம் இசை
அழகுக்கு புத்துணர்வு இசை
உள்ளத்தை உவகையூட்டுவது இசை
கோபத்தை போக்குவது இசை
மௌனத்தை தருவதும் இசை
சிந்திக்க வைப்பதும் இசை
நோய்க்கு மருந்தும் இசை

உடுக்கையின் ஓசையில்
இந்த உலகம் தோண்றியது
இந்த உலகில் இசையின் ஓசையில்
இவள் தோண்றினாள்

மனதில் தத்துவம் தோண்றினல்
நான்
அனுமந்தோடி சிவறஞ்சனி ராகமக
மனதில் நிம்தி இழந்தால்.
சாமா ராகமாக.

சுகமான தூக்கத்தில்
நீலாம்பரியாக
ஜீரண சக்தி வேண்டும் போது
சிறீராகமாக
--
நான்
---
மூங்கிலா நான்
பிறந்திருந்தால்
ஒரு புழ்லாங்குழலாக
வாழ்ந்திருப்பே
ன்

Tuesday, October 21, 2008

விலகாத வினாடிகளாய் இருவரும்.

விலகாத வினாடிகளாய் இருவரும்.

---------------

உன் னோடு பேச நானும்
என்னோடு பேச நீயும்

காத்திருக்கும் பல மணி நேரங்களில்
தத்தளிக்கும் மனதை அடக்க
முடியாத பொழுது.

நீயும் நானும் நெருங்கிய நேரம்
கருத்து வேறுபாடுகள் சிலதால்
தூரம் அதிகமாகிப்போகின்றது:


என்ன செய்ய அருகில் இருந்தால்
கேள்விகள் தொடுக்க மறுத்து
உன்னை அரவனைத்துக் கொண்டு

இருப்பேன் ஒவ்வொரு வினாடியும்.

Wednesday, August 06, 2008

உன் மனதை கேள்




உன் மனதை கேள்
----------
எத்தனை சோதனைகள்
என் காதல் மீது
மனதை கேட்டுப்பார்
உன் உயிர் சொல்லும்
நான் உன் மீது கொண்ட
நம்பிக்கையை.
காதல் என்பது நெருப்பா..?
இல்லை குளிரா..?
இல்லை மாயையா?
தடம் புறண்டு தேடினாலும்
உண்மை என்பதே இல்லையா?
காதலில்.
தேன் பொழிந்த வார்த்தைகள்
கொஞ்சிய மொழிகள்
செதுக்கி எடுத்த
கவி வரிகள்
கரம் தொட்ட இசைகள்
எல்லாம்மாயையா?


உனது கொழுசு
உனது சுடிதார்
உனது மெட்டி
உனது சேலை
எல்லாம் மறைத்து
வைத்தும்
மறக்க மறுக்கின்றது
மனது.
ஏன் நீ..மட்டும் என்னை
புரியமறுக்கின்றாய்.!!!
உனக்காக என் அத்தனை
சுகங்களையும்
விட்டுக்கொடுத்தேன்.
நீ..தந்த உரிமைகளை
உன் என்னம் நிறைவேறியதும்
திருப்பி எடுத்துவிட்டாய்!
துடிக்கின்றேன் புழுவாய்
என் ஆழ் மனதுக்குள்
உன் காதலைஎழுதிவிட்டேன்
என் காதலின் வரிகளால்.

மௌனமாய் இருக்க
மனதும் இடம்
கொடுக்கவில்லை
விடை பெற பாதையும்
தெரியவில்லை.
என்னை சித்திரவதைப்-
படுத்துவதை விட
உன் கையால் என்னை
கொண்று விடு.

rahini
மழையும் நீயே..வெய்யிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே அடடா...

Tuesday, July 29, 2008

வாராயோ.

வாராயோ.
------
நீ.. இன்றி நான் இல்லை
என்று சொன்வன்
நான் இல்லை உயிராக உணர்வாக
அவன் இதயத்தில்
அனால் அவன் மாறிவிட்டான்
அவளுக்காக!!!!!
அவன் வாழ்கின்றான்
இவள் நடைப்பணமானாள்.

Tuesday, May 20, 2008

தேடுகின்றேன் என் மரணத்தை.


தேடுகின்றேன் என் மரணத்தை.
---------.
தன் பெருமைக்கும்
தன் பெயருக்கும்
உன்னை சுற்றி வரும்
மானிடர்களுக்குகொடுக்கும்
மரியாதையில்
உன் நலம் உன் சந்தோசம்
உனக்காக வாழும் என்னை
மதிக்க தவறியது ஏன்

அப்போ நீயும்
பொய்யின் பின் தானா...?
அப்படி என்றால்.
எங்கே வாழ்ந்தாழும்
சந்தோசமாய் வாழ்
எங்கே கவி கொடுத்தாலும்
எங்கே உன் இசையை
வாரிவழங்கினாலும்
அதில் நானும் குளிர்காய்ந்து
கொண்டு
என் மரணத்தை தேடுகின்றேன்
இந்த வாழ்வை வெறுத்து.
வாழ்கு நீ...வழமுடன்.

அன்புடன்
யாழ்கவிதைக்குயில்
ராகினி.