Tuesday, May 20, 2008

தேடுகின்றேன் என் மரணத்தை.


தேடுகின்றேன் என் மரணத்தை.
---------.
தன் பெருமைக்கும்
தன் பெயருக்கும்
உன்னை சுற்றி வரும்
மானிடர்களுக்குகொடுக்கும்
மரியாதையில்
உன் நலம் உன் சந்தோசம்
உனக்காக வாழும் என்னை
மதிக்க தவறியது ஏன்

அப்போ நீயும்
பொய்யின் பின் தானா...?
அப்படி என்றால்.
எங்கே வாழ்ந்தாழும்
சந்தோசமாய் வாழ்
எங்கே கவி கொடுத்தாலும்
எங்கே உன் இசையை
வாரிவழங்கினாலும்
அதில் நானும் குளிர்காய்ந்து
கொண்டு
என் மரணத்தை தேடுகின்றேன்
இந்த வாழ்வை வெறுத்து.
வாழ்கு நீ...வழமுடன்.

அன்புடன்
யாழ்கவிதைக்குயில்
ராகினி.