Monday, May 14, 2007

குயிலின் முத்தம்



இதய அறைக்குள்
புதைந்து கிடந்த
என் சந்தோசங்களை
மீட்டுக்கொண்டது

உன் முத்தங்கள்.

என்இதழ் தந்த முத்தங்களும்
என் மொழி தந்த கவிதைகளும்
நீ..பருகிடும்போதா..


என்னை குயில் என அழைத்து
இந்த குயிலில்

முத்தங்களை
வருடிச்சென்றாய்.
உன் முத்தப்புயலின்

வேகத்தில்
அவஸ்தைப்படும் நான்.
தித்திக்கும் முத்தங்கள்

நித்தம் நித்தம்
உன்னிடம் இருந்து

கிடைக்குமானால்
என் வாழ்வையே..
உன்னிடம் அர்ப்பணித்து

கொள்வேன்.

நிலா


மெல்லிய காற்றின் ஓசையில்
மௌனமாய்ப் போன
என் உணர்வுகளை
நீ.. தீண்டிப்பார்க்கும் போது...
ஒவ்வொரு பகலும்
இரவாகிப் போயின...
எதிர் பார்ப்புடன் காத்திருக்க
வைக்கின்றது.
உன் காதல் கருணை
அன்புநினைவில் நிறுத்தி வைத்திரு
உன் இதயத்திலும்
உன் இதயத்தை வருடும்
சட்டை பையிலும்
அப்போது உன் இயத்தை
நான்முத்தமிட்டு
கொண்டே இருப்பேன்.
தனிமையில் தத்தளித்த நேரங்கள்
பொசுங்கி இன்று இரு ஜீவன்..
ஓன்றாகிப்போன
நாட்கள் கண்டுகொண்டேன்
நிலவாக வந்த போது.