Monday, January 08, 2007

அத்வைதம்


காதலும் சுவாசமும்

இன்பமும் துண்பமும்

ஆசையும் அமைதியும்

உன்மீது கொண்ட

காதலில் தந்து கொண்டேன் .

தேன் போல் இருந்த என்னங்கள்

கண்ணுர்று பட்டதபோல்

உடைந்திடக்கண்டேன்.

இது காலத்தின் செயலோ...?

இல்ல கண்ணுர்றுதான் பட்டதுவோ..?

உனக்குளும் எனக்குள்ளும்

விழுந்துவிட்ட காதல் விதை

ஊடல் வந்தாலும்

அது வளர்ந்து விரிட்ச..மாகிவிட்டபோது

எனி ஊடல் வந்தாலும்

பிரிவே..இல்லை.என்ற வார்த்தை

இப்போ தடம்மாறி சனியனும்

ஆத்மாத்தமாகியபோதும்

என் காதல் அத்வைதம்மா..?

இது விசித்திரமானது

இது உள்ளத்திலும் ஆத்மாவோடும்
உயிரில் உறைந்து போனகாதல்

என்பதால் என்னைநீ.. தூக்கி எறிந்தபோது

என் இதயம் வலிமை அடைந்து

மரணத்தைஅழைக்கின்றது.


என் புகைப்படத்தில்

இருந்தகண்ணை மட்டும் வெட்டி

அனுப்பியபோது

என் கண்ணை கொள்ளை

அடித்தவிட்டேன் என்றாய்

இப்போ என் இதயத்தை தீ...மூட்டிவிட்டு

மறுபக்கம் சென்று விட்டாய்

இதுக்குப்பெயர் அத்வைதமா..?

என் மரணத்தருவாயில்

எனக்கு உறங்க உன் மடி வேண்டும்.

உடலையும் ஊடலையும் மறந்து.

உன் இதயத்தை சுவாசிக்கின்றேன்

இன்று மட்டும் அல்ல என்றும்

நீ..எனக்கு மட்டும்தான் வேண்டும்.

வேண்டும்..

அன்பே..நீ...வேண்டும்

என்னோடு..நீ..வேண்டும்

பூவில் நறுமணம் வேண்டும்

குயிலுக்கு குரல் வேண்டும்

கடலுக்கு அலை வேண்டும்

இசைக்கு தழிழ் வேண்டும்

தழிழுக்கு யாழ் வேண்டும்

யாழுக்கு இசை வேண்டும்

யாழிசைக்கு நான்..வேண்டும்

எனக்கு நீ..வேண்டும்.

--------------

பொய் காதலுக்கு உயிர் கொடுத்த

ராகினி.