Thursday, June 08, 2006

நீ..பிரிந்தால்.......





உன் சுவாசக்காற்றில்
பதிவான என் பெயரை....
அழிக்காமல் உன் நெஞ்சில்
என்னை.....
கவிதையாக்கிக்கொள்கின்றாயே...

நான்...
எத்தனை வார்த்தைகள்

சொல்லத்துடித்தாலும்
உன்னைக் கண்டதும்
அத்தனையும் மறந்து
உன்னை ரசிக்கின்றேன்.

நீ... பிரிந்து செல்லுகையில்
உன்னைக் கவிதையிலும்
இசையிலும் காண்கின்றேன்.
முழுமையாக.. நீ...பிரிந்தால்
என் கண்ணீரில்
காண்போன் உன்னை.

ராகினி.