Monday, September 18, 2006

இவள் புன்னகை உன் கையில்...





இவள் வேண்டும் என்றால்.
நீ.. உண்மைபேச வேண்டும்

இவள் அகமலரவேண்டும் என்றால்
உன் உதடுகள் பொய் பேசுவதை..
நிறுத்த..வேண்டும்.

இவள் புன்னகை சிந்தவேண்டும் என்றால்
நீ... என்னருகில் வரவேண்டும்.

இவள் வாழ வேண்டும் என்றால...
நீ.... உயர வேண்டும்
இவள் அமைதி கொள்ள வேண்டும்..

என்றால்

நீ...நிம்மதி கொள்ள வேண்டும்

ராகினி

Friday, September 15, 2006

நமக்காக...வாழ்வோம்...





நீயும் நானும் பேசியபோது.
இருமனதுக்கும் தெரியாமல்
புகுந்து கொண்டது காதல்..
நீ....காதலித்தாயா..
இல்லை... நான் காதலித்தேனா...
தெரியாத பாதையில்
புரியாத புதிர் உள்ளபோது..
விடைகாண தனிமையில்
தள்ளாடுவது ஏன்...?
உன்னோடும் என்னோடும்
பல நினைவுகள் நதிபோல் ஓட....
வித விதமாய் மனதில்
எதுவும் தோன்றாதபோது..
எனக்காக நீ....யும்
உனக்காக நானும் வாழ்வதை
விட..நமக்காக இனி...
இருவரும் வாழ்வோம்.

---
அன்போடு
ராகினி
ஜெர்மன்