Thursday, June 07, 2007

நீ மட்டும் போதும்..




என்னை...என் உணர்வுகளை...
என் கண்ணீரை துடைக்க வந்த..
என் வசந்தமே...

நீதான் வேண்டும்... என்னோடு
என் உயிருக்கும்... உணர்வுண்டு...
என்று...உணர்த்திய என் செல்லமே..
நீ மட்டும் போதும் எனக்கு...

சொன்ன வார்த்தை போதும் எனக்கு.
உன்னோடு வாழ்ந்து கொண்டே இருக்க...
சொந்த மானாய் நீ...

சொன்ன ஒரு சொல்லாலேயே..
கவிதையனேன் நான்..
நீ தந்த எல்லையில்லா பாசத்தில்
காவியமாகும் நம் வாழ்வு...
உன் அன்பு முத்தத்தில்...
வசந்தமாகும் நம் வாழ்வு...
இருவர் புரிந்துணர்வில்...
வசந்தமே நீ எனக்கு...
வாழ்வாக கிடைத்திருக்கிறாய்..
செல்லமே நீ எனக்கு...
துணையாய் கிடைத்திருக்கின்றாய்...
செல்லும் வாழ்வு.

நம்மை விட்டு செல்ல முடியாது..
தூரம் என்றாலும்...
நம்மை விட்டுப்பிரிய முடியாது
தூரம் எதற்குதான் தடை விதிக்க முடியும்...
நம் அன்பிற்கும் தூரம் ஒரு தடையா?

இல்லை.. நம் காதலுக்கும்...
அன்புக்கும்...தூரம் என்ன செய்ய முடியும் ?

தூரமும் காலமும் தடை இல்லை...
நம் காதலை தொடங்கவும்.. தொடரவும்..
எதுவாக இருக்கட்டும்...
தூரமோ...அல்லது துயரமோ...
நீ மட்டும் போதும்...என்னோடு என்றும்

-----
காவியத்தில்
ராகினி
எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]

3 comments:

rahini said...

நீங்கள் கவிதைக்குயில் தான் என்பதில் சந்தேகமில்லை.
கவிதைக்காட்டில் குயிலின் கவிதை கேட்க வந்த என் காதுகள் (கவிதைவேடன்கள்) கொண்டுவந்த கவிதை என் புரிதலுக்கு கொண்டுவந்தால் பாராடி மகிழ்வேன்.

வாழ்க நீங்கள்
வாழ்க உங்கள் கவிதைகள்.

நெஞ்சார்ந்த பாசமுடன்
என் சுரேஷ்

மஹாராஜா said...

arumai..arumai..
excellent.. may god bless you.

rahini said...

உங்கள் வரவுக்கு என் மனம் நிறைந்த நன்றி