Friday, May 19, 2006

காதல் சுவாசம்


வார்த்தைகள் தேடி நான்
தவிக்கும் போது
உன் காதல் எனக்கு
கிடைத்து விட
என் கவிதைகள்
உயிர் பெற்றன.

கருமுகில் வானத்தை
மறைத்து இருளாக்கும் போது....
எங்கிருந்தோ..உன் குரல்
எனை அழைத்திட

இருளுக்குள் மிளிரும்
நட்ச்சத்திரம்போல்...
உன் குரல் என் செவிதனில்
இசையுடன் பாய்ந்திட
அந்த இரவை அழைக்கின்றேன்
இசையுடன் உன்னில் கரைந்துவிட.

உன் உயிர் துடிப்பை நான்
உணர்ந்து என் காதலை
உன்னிடம் தந்ததில்
ஒரு காவியத்தை காண்கின்றேன்
உன் கவிதனில்.

உதடுகள் கவி சிந்த
விழிகள் காத்திருக்க
இதயம் மலர்ந்திட
நம் காதல் பரவசம்
அடைகின்றது.
நம்காதல் இணைந்த
நேரம்
உலகில் ஓரு காவியம்
உதயமானது.
இருஉயிரும் ஒன்றாய்
கலந்தது.


நான் என் நிலை இழந்து..
போனாலும் எனக்கு தேவை
உன்குரல் தான்...
நான்

சிரிக்க மறந்த பொழுதுகள்
எல்லாம் என் புன்னகையை
மீட்டித்தந்து கொண்டு
இருக்கின்றாய்.

உனக்கு நன்றி சொல்லி
நான் பிரிவதை.
விடஉன்னை காதலித்துக்..
கொண்டே இறந்து..
விடுவேன்.

என் அன்பே..
உன் காதல் சுவாசம்
இருந்தால் என் புன்னகை
பூத்துக்..கொண்டே இருக்கும்

காவியத்தில்
ராகினி

2 comments:

முத்தமிழ் said...

ராகினி அவர்களே,

இன்றுதான் உங்கள் வலைப்பதிவைப் படிக்கிறேன். அனைத்தும் அருமையாக உள்ளது. எப்படி இவ்வளவு வலைப்பதிவுகளை பராமரிக்கிறீர்கள்?

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

முத்தமிழ்மன்றத்திற்கும் வருகை தாருங்கள்.

www.muthamilmantram.com

rahini said...

உங்கள் வாழ்த்து இருக்கும் வரை எழுதத்தூண்டும்
என்கரங்கள்
நன்றி
முத்தமிழ்